திருப்பூர், ஏப்.26: திருப்பூர் சக்தி தியேட்டர் அருகே உள்ள நொய்யல் ஆற்றை பவானி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாய் கடந்து செல்கிறது. குடிநீர் குழாய்கள் ஆற்றை கடக்கும் வகையில் 20க்கு மேற்பட்ட பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பில்லர்கள் அமைத்து பல ஆண்டுகள் நிலையில் இதனை முறையாக பராமரிக்கப்படாததால் ஒரு சில பில்லர்கள் வலுவிழந்து காணப்படுகிறது. நல்லுார், செட்டிபாளையம், கோவில் வழி, காமராஜர் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலுக்கு முக்கிய குடிநீர் குழாய் இதுவாகும்.