பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் இணைந்தனர்

கோபி, ஏப்.26: கோபி அருகே நம்பியூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் திமுகவில் நேற்று இணைந்தனர்.  நம்பியூரில் ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில் தலைமையில் நடந்த ஒன்றிய திமுக திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு கோசனம் ஊராட்சி செயலாளர் இளங்கோ,  ஆண்டிபாளையம் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் நம்பியூர் ஒன்றிய பாஜ செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளங்கோ, கிளைச்செயலாளர் கோபால மூர்த்தி, உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், அஜித்குமார், மாரிச்சாமி, முருகேசன், ஜீவானந்தம், தீர்த்தகிரி, அஸ்வின், திருமுருகன், ஆண்டிபாளையம் தேமுதிக செயலாளர்  காளியண்ணன், அதிமுக வார்டு செயலாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

Related Stories: