இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

ஈரோடு், ஏப். 26:தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ஈரோடு  பெரியார்மன்றத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இசாரத்அலி  தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர்  மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு  கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் முத்துபாவா, பொருளாளர் நடராஜன்,  போதகர்கள் ஜான்சாமுவேல், நல்லமுத்து, லாரன்ஸ், தி.க. மாவட்ட செயலாளர்  சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பின்னர், இலங்கையில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனஅஞ்சலி செலுத்தினர்.

Related Stories: