தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ஏப். 26: ஈரோடு பெருமாள்மலை மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த அம்மாசை மகன் பிரபு (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா. பிரபுவிற்கும், சுதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இதனால், பிரபு கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்தார். இந் நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரபு தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர், பிரபுவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். த்தோடு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: