ஈரோடு, ஏப். 26: ஈரோட்டில் பஸ் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் விருதாசலம் கார்குடல் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த செல்வம் மகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (27). எலக்ட்ரீசியன். இவர், வேலை நிமித்தமாக நேற்று ஈரோட்டிற்கு வந்தார். பின்னர், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். நாச்சியப்பா வீதி வழியாக பஸ் சென்றபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பாக்கெட்டில் இருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி பின்னால் நின்றிருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.