ஈரோடு, ஏப். 26:உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் வார்டு வாரியாக வாக்குசாவடி வரைவு பட்டியல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 42 பேரூராட்சிகள், 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளையடுத்து தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர் செய்து வருகின்றனர்.