சத்தியமங்கலம், ஏப்.26:சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் உள்ள பள்ளங்களின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை வழியாக இருமாநிலங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது.சத்தியமங்கலம் அருகே பண்ணாரி செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கள்ளுக்கடை பிரிவு மற்றும் புதுவடவள்ளி முருகன்கோயில் மேடு என 2 இடங்களில் உள்ள பள்ளங்களின் குறுக்கே குறுகிய பாலம் இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.