அதிராம்பட்டினம், ஏப். 26: அதிராம்பட்டினம் கடல் பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் ரகசிய போலீஸ் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சை கடல் பகுதியான தம்பிக்கோட்டை செக்போஸ்டிலிருந்து விளாங்குளம் செக்போஸ்ட் வரை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் மார்க்கம் வழியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், கடலில் மீன் பிடிக்க படகுகளை சோதனை செய்கின்றனர்.குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பினர் தஞ்சை கடல் வழியாக வந்தால் பிடிப்பதற்கு ஏதுவாக போலீசார் மற்றும் ரகசிய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்கள், மீன்பிடி துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.