பைக்குகள் மோதல் 2 பேர் படுகாயம்

திருக்காட்டுப்பள்ளி, ஏப். 26: பூதலூர் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் நேற்று முன்தினம் காலை பூதலூரிலிருந்து சித்திரகுடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சித்திரகுடி பஸ் நிறுத்தம் அருகில் எதிரில் பூதலூர் ரயிலடியை சேர்ந்த செல்வம் (40) ஓட்டி வந்த பைக், கர்ணன் பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பூதலூர் போலீசில் கர்ணன் புகார் செய்தார். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Related Stories: