மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி பறிமுதல்

கும்பகோணம், ஏப். 26: கும்பகோணத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை பைபாஸ் ரவுண்டானா சாலையில் தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை மாங்குடியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராம்குமார் (25) என்பவர் அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்று மணலை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து ராம்குமாரை கைது செய்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: