குடந்தையில் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்திய கணவர் கைது

கும்பகோணம், ஏப். 26: சுவாமிமலையில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அடுத்த சுவாமிமலை கல்லணை மெயின் ரோட்டை சேர்ந்த மாதவன் மனைவி முத்துலட்சுமி (40). இந்நிலையில் தினம்தோறும் மது குடித்து விட்டு மனைவி முத்துலட்சுமியிடம் மீனாட்சிசுந்தரம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் வேதனையடைந்த முத்துலட்சுமி, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாதவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பைக் திருட்டு: கும்பகோணம் அடுத்த தாராசுரம் மறவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (35). இவர் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் காலையில் பார்த்தபோது நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை.இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் மீனாட்சிசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: