கும்பகோணம், ஏப். 26: சுவாமிமலையில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அடுத்த சுவாமிமலை கல்லணை மெயின் ரோட்டை சேர்ந்த மாதவன் மனைவி முத்துலட்சுமி (40). இந்நிலையில் தினம்தோறும் மது குடித்து விட்டு மனைவி முத்துலட்சுமியிடம் மீனாட்சிசுந்தரம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் வேதனையடைந்த முத்துலட்சுமி, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாதவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.