தென்னை முறிந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி

பாபநாசம், ஏப். 26: பாபநாசம் அருகே தென்னை மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (57). இவர் மனைவி கற்பாத்தாளுடன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த மாகாளிபுரம் மெயின்ரோட்டில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான அச்சு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியப்பன் திடலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த தென்னை மரம் முறிந்து மாரியப்பன் மீது விழுந்தது.இதில் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே மாரியப்பன் பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: