×

வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் மே.2க்குள் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.26:   புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2019க்கான வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல்கள் மீது ஏதேனும் ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் அதனை எழுத்து பூர்வமாக வருகிற 2ம் தேதிக்குள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு பெறப்படும் ஆட்சேபனைகள் விதிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு தேவைப்படின் வாக்குச்சாவடிகளின் பட்டியல்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...