×

குளித்தலை அருகே மணத்தட்டையில் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் வீணாகும் அவலம்

குளித்தலை, ஏப்.26:குளித்தலை அருகே மணத்தட்டையில் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் நீர்வீழ்ச்சிபோல் வீணாகி வருகிறது.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மன தட்டை காவிரி ஆற்றிலிருந்து மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய், குளித்தலை-மணப்பாறை சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் வழியாக அய்யர்மலை, மணப்பாறை, புத்தாநத்தம் வழியாக மருங்காபுரி வரை செல்கிறது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது மேலும் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் பழுதாகி குழாய் உடைப்பு ஏற்படுவதும் அதனை சரி செய்வதற்குள் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இரட்டை வாய்க்கால் வழியாக செல்லும் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் திடீரென வெடிப்பு ஏற்பட்டு நீர்வீழ்ச்சி போல் கீழே கொட்டி வாய்க்காலில் உள்ள அசுத்த நீருடன் கலந்து செல்கிறது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் தண்ணீர் வீணாகி வருகிறது. அதனால் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை யை போக்க தண்ணீர் வீணாகாமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maragupuri ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு