×

பொதுமக்கள் கோரிக்கை

கரூர், ஏப்.26: வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதி தளவாபாளையத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் சாலையில் வாய்க்கால் பாலம்கட்டும்வேலை தொடங்கியது. இந்த வேலைக்காக சாலையில் குழிபறிக்கப்பட்டு கட்டுமான தளவாடங்கள் போடப்பட்டு வேலை செய்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த வேலை நடைபெறுவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலையில் சிரமப்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று கொண்டுள்ளனர். மாதக்கணக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துரிதமாக பணிகளை நிறைவுசெய்து போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா