உந்து குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி ரங்கம் பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்

திருச்சி, ஏப்.26:  ரங்கம் பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் ஆளவந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையத்திலிருந்து ரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்கு செல்லும் 600 எம்.எம்.குடிநீர் உந்து குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருவதால், ரங்கம், திருவானைக்காவல், மாம்பழச்சாலை, பெரியார் நகர் மற்றும் அம்மா மண்டபம் பகுதிகளுக்கு இன்று (26ம் தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை (27ம் தேதி) வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும். எனவே இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைப்பு கொடுத்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: