×

திருச்சி மாநகராட்சி சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி மே 1ல் துவக்கம் முன்பதிவுக்கு அழைப்பு

திருச்சி, ஏப்.26:   திருச்சி மாநகராட்சி சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி மே 1ம் தேதி துவங்குகிறது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி  மற்றும் தேசிய கல்லூரியுடன் இணைந்து நடத்தும் கோடை விளையாட்டு பயிற்சி முகாம்  மே 1ம்தேதி முதல் 25ம் தேதி வரை இக்கல்லூரி வளாகத்தில் நடைபெறஉள்ளது. இந்த முகாமில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் துறையில் சிறந்த பயிற்சியளிக்கப்படும்.   இதில் 6 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ,மாணவிகள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள 9994118478 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இக்கோடை பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை திருச்சி தேசியக் கல்லூரியின் உடற்கல்வி துறையிலும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags : Summer sports training ,Tiruchirappalli Corporation ,
× RELATED கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்...