தொட்டியம், ஏப்.26: தொட்டியம் அருகே மின்னத்தம்பட்டியில் கடந்த 6 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொட்டியம் தாலுகா காமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மின்னத்தம்பட்டி காலனியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த வாரம் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் மின் கம்பம் உடைந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடைந்த மின்கம்பத்தை சீரமைத்து மின்சாரம் வழங்குமாறு பொதுமக்கள் மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுமானால் பொக்லின் இயந்திரம் கொண்டு வந்து குழி பறித்து புதிய கம்பம் நட வேண்டும்.