ஓமலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை ேபாக்சோவில் தொழிலாளி கைது

ஓமலூர், ஏப்.26: ஓமலூர் அருகே 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தறி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஓமலூர் அருகே அறியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சக்திவேல்(23). அங்குள்ள தறி கூடத்தில், நெசவு தொழில் செய்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, 10ம் வகுப்பு தேர்வு எழுதுவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு சக்திவேல் அடிக்கடி சென்று வருவார். இப்போது பெற்றோர்கள் வீட்டில் இல்லாத ேநரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, நடந்த சம்பத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் கொடுத்தனர். புகாரின் ேபரில், போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: