சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

சேலம், ஏப்.26: சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்  அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர்,  நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மே 19ம் தேதி நடைபெறும் 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில், சூலூர் தொகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் அன்னபூரணி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னதுரை, குணசேகரன், தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, இளைஞரணி அமைப்பாளர் சந்திர மோகன், ஒன்றிய நிர்வாகிகள் வெண்ணிலா சேகர், சுரேஷ்குமார், விஜயகுமார், பாலு, முருகேசன், மணி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: