ஓமலூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஓமலூர், ஏப்.26: ஓமலூர்  காவல்துறை சார்பில், வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஓமலூர் காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஓமலூர் நகர அனைத்து வாகன ஓட்டிகள், ஆட்டோ, மற்றும் சொகுசு வாகன ஓட்டிகள் கலந்துகொண்டனர். இதில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், போலீசார் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது. வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பேசுதல், தலைக்கவசம் இல்லாமல் செல்லுதல், கார்களில் சீட் பெல்ட் போடாமல் அலட்சியமாக இருத்தல், அதிவேகமாக இயக்குதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டுனர்கள், பல்வேறு சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Related Stories: