வில்லியனூர், ஏப். 25: வில்லியனூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா (33). தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் பைபாசில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மொபட்டுக்கு பெட்ரோல் போட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். வீட்டின் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு நின்றிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் சவரன் தங்க சங்கிலியை பறித்தார்.