×

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

விழுப்புரம்,  ஏப். 25: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே  புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிநாதன்(41). கூலி தொழிலாளி.  இவருக்கு சொந்தமாக உள்ள புளியமரத்தில் நேற்று முன்தினம் காசிநாதன் புளிபறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காற்றடித்ததால்  கீழே தவறி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு  மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி  நேற்று இறந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு