×

சங்கராபுரத்தில் பத்திரப்பதிவு செய்வதில் அலைக்கழிப்பு

சங்கராபுரம், ஏப். 25: சங்கராபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு சங்கராபுரம் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்திரப்பதிவு செய்ய வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை வந்த பிறகு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு டோக்கன் பெற்று வந்தால்கூட இங்கு பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஆகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பத்திரவு பதிவு செய்யாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் பாரி கூறுகையில், சங்கராபுரம் பதிவுத்துறையில் சரியாக உள்ள பத்திரமே பதிவு செய்யாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பதிவுத்துறை அலுவலர்களிடம் கேட்டால் முறையான பதில் இல்லை.

மேலும் இந்த பதிவுத்துறையில் அதிக லஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இதனை தடுக்க மாவட்ட பதிவுதுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார். பத்திர பதிவுக்கு வருபவர்கள் காலை முதல் இரவு வரை காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை சங்கராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sankarapuram ,
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா