×

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக நிவாரணம்

திண்டிவனம், ஏப். 25: திண்டிவனம்  அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(32) கூலி  தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளைக்கு  கூலிதொழில் செய்ய சென்றுள்ளார். அப்போது மதியம் 2 மணி அளவில் அவரது வீடு  திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க  முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. இதனிடையே தீ வேகமாக பரவியதில் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தகவலறிந்த  மயிலம் எம்எல்ஏ டாக்டர் மாசிலாமணி பட்டணம் கிராமத்திற்கு  சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரிசி, துணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது  திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம், அமராவதி, ஆறுமுகம், அரிகிருஷ்ணன், காளி,  மணி, ஊராட்சி செயலர் சுப்புராயலு, சின்னையன், பட்டணம் கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி