இளம்பெண் மர்ம சாவு போலீசில் தந்தை புகார்

செஞ்சி, ஏப். 25:  செஞ்சி அருகே மகள் சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி அடுத்த கோணை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி பேபிகிருபா(21). இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போது இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குழந்தைக்கு பால் கொடுக்க எழுப்பியபோது பேபிகிருபா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறினார். இதனால் சாவில் மர்மம் இருப்பதாக பேபி கிருபாவின் தந்தை ராஜீ அனந்தபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: