கள்ளக்குறிச்சி, ஏப். 25: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் பஞ்சுமூட்டை கொள்முதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி பருத்தி சந்தைக்கு கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பஞ்சுமூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதில் நேற்று 116 விவசாயிகள், 750 பஞ்சு மூட்டைகளை
விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், அன்னூர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்தில் எடுத்து சென்றனர்.