உளுந்தூர்பேட்டை, ஏப். 25: உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது களவனூர் ஆற்றில் இருந்து டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நாராயணசாமி(42), பாலு(27), சுப்ரமணி(44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டயர் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.