உளுந்தூர்பேட்டை, ஏப். 25: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(51). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான மினி டெம்போவை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது அந்த மினி டெம்போவை காணவில்லை, பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் ராஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்கு பதிந்து மினி டெம்போவை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.