நர்சிங் மாணவி மாயம்

செஞ்சி, ஏப். 25:  செஞ்சியில் நர்சிங் மாணவி மாயமானதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்(47). இவரது மகள் தேவி(20). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி பாட்டி வீடான நரசிங்கராயன்பேட்டைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இவரை பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செஞ்சி போலீசில் தேவியின் தந்தை ரகோத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: