இருதரப்பினர் மோதல்: 5 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், ஏப். 25: திருக்கோவிலூர் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சீனுவாசன்(32). இவரும், இவரது மனைவி இந்திராகாந்தியும் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியாயி என்பவர் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து அங்கு வந்த அவரது கணவர் ராஜா என்பவர் பெரியாயியை தாக்க முயன்றார். அப்போது என் வீட்டில் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டு சீனுவாசன் கூறி அவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். அப்போது ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சீனுவாசனையும், அவரது மனைவி இந்திராகாந்தியையும் ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். பதிலுக்கு சீனுவாசன் குடும்பத்தினர் ராஜா குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சீனுவாசன், அவரது மனைவி இந்திராகாந்தி,

ராஜாவின் தாய் லட்சுமி ஆகிய மூவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின்பேரில் ராஜா, அவரது சகோதரர் ஆறுமுகம், உறவினர் மணிகண்டன் ஆகிய மூவர் மீதும், ராஜா கொடுத்த புகாரின்பேரில் சீனுவாசன், அவரது மனைவி இந்திராகாந்தி மீதும் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து இதில் ராஜா, சீனுவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: