தம்பதியை தாக்கிய 3 பேர் கைது

திருக்கோவிலூர், ஏப். 25: திருக்கோவிலூர் அடுத்த திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை(47) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சங்கீதா(35) ஆகிய இருவரையும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார், ஏழுமலை, மகன் ராஜா(23), மனைவி மங்கவரத்தாள்(45) ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: