விழுப்புரம், ஏப். 25: விழுப்புரத்தில் வாய் பேசமுடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). மாடு மேய்த்துவரும் இவர் விழுப்புரத்தில் ஒரு வீட்டில் வாய்பேச முடியாமல், நடக்கமுடியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.