புவனகிரியில் சதி திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது

புவனகிரி, ஏப். 25: புவனகிரியில் இரு சமூகத்தினர் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இதை போக்க இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குரியாமங்கலம் என்ற கிராமத்தின் அருகே வயலில் 3 பேர் உட்கார்ந்து கொண்டு பேருந்து மீது கல்வீச சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், புவனகிரி அருகே உள்ள தம்பிக்குநல்லாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார்(25), காசிராஜன்(24), மணிமாறன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் புவனகிரி முள்ளிப்பள்ளம் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த கோபிநாத்(26), குமரகுரு(26) ஆகிய இருவரும் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: