திருக்கோவிலூர், ஏப். 25: திருக்கோவிலூர் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சீனுவாசன்(32). இவரும், இவரது மனைவி இந்திராகாந்தியும் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியாயி என்பவர் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து அங்கு வந்த அவரது கணவர் ராஜா என்பவர் பெரியாயியை தாக்க முயன்றார். அப்போது என் வீட்டில் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டு சீனுவாசன் கூறி அவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். அப்போது ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சீனுவாசனையும், அவரது மனைவி இந்திராகாந்தியையும் ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். பதிலுக்கு சீனுவாசன் குடும்பத்தினர் ராஜா குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.