கோடை வெயிலால் ஆண்டிபாளையம் குளத்தில் தண்ணீர் வற்றியது

திருப்பூர்,ஏப்.25:திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம்  குளத்தில் கோடை வெயில் காரணமாக தண்ணீர் குறைந்து வருகிறது.திருப்பூர், மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவைகள் உள்ளது. இதில் மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் பொழுதை கழிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருந்ததால் இந்த குளத்தில் உள்ள தண்ணீர் படிப்படியாக வற்ற துவங்கியது. இதனால் இந்த குளத்தில் முன்பு இருந்ததை விட தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. ஜூன் மாதம் இறுதி வரை வெயில் அதிகமாக இருப்பதால் மேலும் தண்ணீர் குறையக்கூடுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: