வெள்ளகோவில்,ஏப்.25:வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 32,823 கிலோ கொப்பரை ரூ.25 லட்சத்து 7 ஆயிரத்து 300க்கு விற்பனை நடந்தது. திண்டுக்கல், திருப்பூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் 60 பேர் 650 மூட்டை கொப்பரைகளை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் முத்தூர்,வெள்ளகோவில், காங்கயம் பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 10 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் தரமான முதல் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.96.65க்கும் ,இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.51.65க்கும் விற்பனையானது.