கோவை ஏல மையத்தில் தேயிலை வரத்து அதிகரிப்பு

கோவை,ஏப்.25:  கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தேயிலை தூள் மற்றும் இலைரக தேயிலை வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேயிலை ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். நேற்றைய தேயிலை வர்த்தக மையத்தில் ஏலம் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 829 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 73 சதவீதம் ஏலம் போனது.

இதில் 41 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் 110 ரூபாய் 82 காசுகளுக்கு  ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 113 ரூபாய் 23 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை குறைந்துள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 689க்கு தேயிலை தூள் ஏலம் போனது. இலை ரக தேயிலை 79 ஆயிரத்து 496 கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில் 61 ஆயிரத்து 336 கிலோ ஏலம் போனது. இது 77 சதவீதம் ஆகும். இதில் 27 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.101.64க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.102.27க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.63 காசுகள் விலை குறைந்துள்ளது. மொத்தமாக ரூ. 62 லட்சத்து 34 ஆயிரத்து 191க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது.

Related Stories: