மகிமாலீஸ்வரர் கோயிலில் 29ம் தேதி தேரோட்டம்

ஈரோடு, ஏப்.25:   ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் பிரசித்தி பெற்ற மகிமாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் நரசிம்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சதய தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி அப்பர், விநாயகர் புறப்பாடு நடந்தது. நேற்று மாலை சந்திரசேகரர் காமதேனு வாகனத்தில் புறப்பாடும், பல்லவன் சரணாகதி நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (வியாழன்) தண்ணீர் பந்தல் திருநாளும், 26ம் தேதி கட்டமுது திருநாளும், 27ம் தேதி சந்திரசேகர் புறப்பாடும், 28ம் தேதி அப்பர் கயிலை காட்சியும், அன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் இந்திர வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Related Stories: