வேனை கடத்தியவர் கைது

புதுக்கோட்டை,ஏப்.25: புதுக்கோட்டை அருகேயுள்ள பெரியநாயகிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணப்பெருமாள் மகன் வேல்முருகன்(34). இவர் சொந்தமாக மினிவேன் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 22ம்தேதி வேல்முருகன் மினிவேனை முடிவைத்தானேந்தல் சாலையில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வேனை காணவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வைகுண்டம் அருகேயுள்ள கால்வாயைச் சேர்ந்த கணபதிபாண்டியன் மகன் சுடலைகண்ணன்(30) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: