சாத்தான்குளம், ஏப். 25: சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் விவசாயி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள மேலபனைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தாமஸ் ஜெயசீலன்(44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பேய்க்குளம்-உடையாண்டி சாலை யில் உள்ளது. நிலம் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோயில்பிச்சை மகன் செல்வின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஜெயசீலன் தற்போது தனது நிலத்தில் மாட்டு தீவனம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை செல்வின் மற்றும் அவரது மகன்கள் ஏசுதாசன், டேனியல் ஆகிய 3பேரும் ஜெயசீலன் நிலத்தில் புகுந்து பயிர்களை வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஜெயசீலனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.