தோட்டத்துக்கு தீவைப்பு 1000 வாழைகள் நாசம்

சாத்தான்குளம், ஏப்.25: சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணித் தலைவராக உள்ளார். இவரது தோட்டம் பேய்க்குளம் - பழனியப்பபுரம் இடையே உள்ளது. தற்போது தோட்டத்தில் 7500 நாட்டு வாழைகள் பயிரிட்டுள்ளார். அவை விளைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அவரது தோட்டத்தில் வாழைகள் தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். காற்றில் தீ மளமளவௌ பற்றி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் 1000 வாழைகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். விரைந்து தீயை அணைத்ததால் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழைகள் தப்பின. இதுகுறித்து முருகேசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் சப். இன்ஸ்பெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: