சாத்தான்குளம், ஏப்.25: சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணித் தலைவராக உள்ளார். இவரது தோட்டம் பேய்க்குளம் - பழனியப்பபுரம் இடையே உள்ளது. தற்போது தோட்டத்தில் 7500 நாட்டு வாழைகள் பயிரிட்டுள்ளார். அவை விளைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அவரது தோட்டத்தில் வாழைகள் தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். காற்றில் தீ மளமளவௌ பற்றி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.