தூத்துக்குடி,ஏப்.25: இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம்தேதி தேவாலயம் மற்றும் விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி சின்னக்கோயில் என்றழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலயத்தில் நடந்தது. கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி ஸ்டீபன் தலைமை வகித்தார். இதில் ஆலய வளாகத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பவனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அஞ்சலி திருப்பலியும் நடந்தது.