புளியங்குடியில் 50 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

புளியங்குடி, ஏப். 25:  நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி புளியங்குடி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளர்கள் அண்ணாதுரை, திருமலை வேலு, பொன்னுச்சாமி மற்றும் சுகாதார பணியாளர்கள் சிந்தாமணி மற்றும் தென்காசி மெயின் ரோடு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: