பணகுடி, ஏப். 25: பணகுடி நம்பிசிங்க பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா, கடந்த 23ம் தேதி தொடங்கியது. வருகிற 27ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சேட்டா நாராயணன் என்றழைக்கப்படும் தேவி பூதேவி சமேத நம்பி சிங்கபெருமாள் கோயிலில் வசந் உற்சவ விழா தொடங்கியது. விழாைவயொட்டி பெருமாள் மற்றும் தாயார்களுக்கு தினமும் திருமஞ்சனம், சிறப்பு அபிஷேசங்கள், தீபாராதனை நடந்து வருகிறது.