பணகுடி கோயிலில் வசந்த உற்சவ விழா

பணகுடி, ஏப். 25:  பணகுடி நம்பிசிங்க பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா, கடந்த 23ம் தேதி தொடங்கியது. வருகிற 27ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சேட்டா நாராயணன் என்றழைக்கப்படும் தேவி பூதேவி சமேத நம்பி சிங்கபெருமாள் கோயிலில் வசந் உற்சவ விழா தொடங்கியது. விழாைவயொட்டி பெருமாள் மற்றும் தாயார்களுக்கு தினமும் திருமஞ்சனம், சிறப்பு அபிஷேசங்கள், தீபாராதனை நடந்து வருகிறது.

மேலும் இங்குள்ள வசந்த மண்டபத்தில் நான்கு பக்கமும் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் தாமரை மலர்களை வைத்து அலங்கரித்து சுவாமி, தாயார்களுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்படுகிறது. பலவண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் பஜனை பாடல்களும் பாடி வருகின்றனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். வருகிற 27ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது.

Related Stories: