நாங்குநேரி, ஏப். 25: விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார், விஜயநாராயணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த ராமசுப்பு (50) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 11 மதுபாட்டில் மற்றும் ரூ.100 பறிமுதல் செய்யப்பட்டது.