எம்எஸ்பிவி பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

பாவூர்சத்திரம், ஏப். 25: பாவூர்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, சென்னை பயனூர் டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் தலைமை பொறுப்பாளர் நடராஜன் ஆகியோர் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்த 117 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினர். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ரமேஷ், பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அலுவலர் மணிராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர், கல்லூரி துறை தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆட்டோமொபைல் துறை தலைவர் ஹரிஹரன் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: