கடையம், ஏப். 25: பொட்டல்புதூர் முத்தன் தெருக்களில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் யூனியனுக்குட்பட்ட பொட்டல்புதூர் ஊராட்சியில் முத்தன் தெரு உள்ளது. இங்குள்ள மூன்று தெருக்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த தெருக்களில் சாலை, கழிவுநீர் வசதியில்லாததால் மழை தண்ணீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கின்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.