பொட்டல்புதூரில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி

கடையம், ஏப். 25:  பொட்டல்புதூர் முத்தன் தெருக்களில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் யூனியனுக்குட்பட்ட பொட்டல்புதூர் ஊராட்சியில் முத்தன் தெரு உள்ளது. இங்குள்ள மூன்று தெருக்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த தெருக்களில் சாலை, கழிவுநீர் வசதியில்லாததால் மழை தண்ணீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கின்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.

இரவு நேரங்களில் விஷ ஜந்துகள், வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் முறையாக வரி செலுத்தி வருகிறோம். ஆனாலும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர் ஓடை இன்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு முத்தன் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் அல்லது சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும். அதற்கு முன்னதாக கழிவுநீர் கால்வாயும் அமைக்க வேண்டும், என்றனர்.

Related Stories: