திருச்சி மாவட்டத்தில் 33 தபால் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஏப்.25:  திருச்சி மாவட்ட பொதுமக்கள் மாவட்டத்தில் உள்ள 33 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் அட்டை வேண்டி கட்டணமில்லாமல் பதிவு செய்யவும், உரிய கட்டணம் செலுத்தி திருத்தம் செய்துகொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் 33 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை கட்டணமின்றி பதிவு செய்யப்படும். ரூ.50 கட்டணத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்தும், பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்திய அளவில் ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் திருச்சி தபால் துறை முன்னிலையில் உள்ளது. திருச்சி தலைமை தபால் நிலையம், பெல் தபால் நிலையம், அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள தபால் நிலையம், கைலாசபுரம், ஜாபர்ஜா தெரு கிளாக் டவர், எடமலைப்பட்டி புதூர், பொன்மலை, அரியமங்கலம், ஜமால் முகமது கல்லூரி, கே.கே.நகர், காஜா நகர், குழுமணி, மேல கல்கண்டார் கோட்டை, ஆர்டனன்ஸ் பேக்டரி, காட்டூர் பாப்பாகுறிச்சி, பெட்டவாய்த்தலை, புதூர், தேசிய தொழில்நுட்ப கல்லூரி, ராம்ஜீ நகர், சோமரசம்பேட்டை, தென்னூர், தெப்பக்குளம், தில்லை நகர், திருச்சி ஏப்போர்ட், மலைக்கோட்டை, திருச்சி ஆர்.எஸ், திருவெறும்பூர், உறையூர், லால்குடி, கல்லகம், கல்லக்குடி, புள்ளம்பாடி, பூவாளூர் என மொத்தம் 33 தபால் நிலையங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது. இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: