திருச்சியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் d 1.43 லட்சம் அபராதம் விதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி, ஏப்.25:  திருச்சியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்தாக 400 கிலோ பிளாஸ்–்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.43 லட்சம் அபராதம் விதித்து  வசூலித்தனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஆய்வுகள் செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திருச்சி மாநகராட்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜா மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திருச்சி பெரிய கடைவீதி மேலராணித் தெரு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோன் உரிமையாளர் கிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, கடையை மூடி சீல் வைக்க முடிவு செய்தனர். அப்போது கிருஷ்ணன் உடனடியாக ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்தினார். இதனால் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கை கைவிட்டனர். மேலும் அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்ககூடாது என கடை உரிமையாளருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.

இச்சம்பவம் பெரிய கடைவீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக ரூ.43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கு பறிமுதல் செய்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 400கிலோ பிளாஸ்–்டிக் பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.43 லட்சம் அபராதம் விதித்து  வசூலித்தனர். அதுமட்டுமின்றி ஆய்வின்போது டெங்கு ஒழிப்பு காரணிகள் இருந்ததாக ரூ.5 ஆயிரமும், குப்பைகளை தரம் பிரிக்காததற்கு ரூ.2,500ம் நேற்று அபராதமாக அதிகாரிகள் வசூலித்தனர்.

Related Stories: